பாதச்சுவடுகள் கவிஞர் இரா இரவி

பாதச்சுவடுகள் ! கவிஞர் இரா .இரவி !

கடற்கரையில் உள்ள பாதச்சுவடுகள்
காதலர்கள் வந்து போனதைப் பறை சாற்றுகின்றன !

இரண்டு கால்களின் பாதச்சுவடுகளும் ஒன்று
இரண்டு காதலர்களின் எண்ண அலைகள் ஒன்று !

கடற்கரை வந்து கரம் பிடித்தோர் உண்டு
கரம் பிடிக்க முடியாமல் பிரிந்தோர் உண்டு !

திட்டமிட்டு பிரிந்திட்ட காதலர்கள் உண்டு
திட்டமிட்டு இணைந்திட்ட காதலர்கள் உண்டு !

இருவராக இணைந்தே வந்தவர்கள் உண்டு
இருவர் ஒருவராகி வந்து செல்வதும் உண்டு !

ஊடல் காரணமாகப் பிரிந்தவர்கள் உண்டு
உடல் காரணமாகப் பிரிந்தவர்கள் உண்டு !

பாதச்சுவடுகள் பார்க்க அழகாக இருந்தாலும்
பெரும் காற்று வந்து கலைப்பதும் உண்டு !

கடல் கரையோரத்து பாதச்சுவடுகளை
கடல் அலைகள் வந்தும் அழிப்பது உண்டு !

காதலர்களின் பாதச்சுவடுகள் மட்டுமல்ல
கடலை சுண்டல் விற்கும் பாதச்சுவடுகள் உண்டு !

கல்வெட்டு போல பதிந்தவைகள் உண்டு
காற்றால் அழிந்தவைகள் உண்டு !

வாழ்க்கை நிரந்தரமன்று என்ற வாழ்வியலை
வந்து போனவர்களின் பாதச்சுவடுகள் உணர்த்துகின்றன
.




இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (8-Mar-16, 8:27 pm)
பார்வை : 149

புதிய படைப்புகள்

மேலே