மனிதம் மாண்டதடா

கலங்காதே என் தோழா...!
காலம் பதில் சொல்லும் ஒருநாள்....

இருட்டு உலகமிதில்
தவறிப் பிறந்துவிட்டாய் -இதில்
இறக்ககுணம் கொண்டோரைத்
தேடுவது கடினம்...!

பணத்திற்காக கண்டதைத் தின்னும்
கழுகுக்கூட்டமடா....!

அதை மண்ணிலே புதைத்துவைத்து
மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளும்
மண்தவளைக் கூட்டமடா....!!

இதயமற்ற ஈனப்பிறவிகள்
இருமாப்பில் அலையும் தேசமடா -இங்கு

அன்பில்லா அரக்க்க்கூட்டம்
உன் அடிவயிற்றில் மிதிக்குமடா....!

இதில் மதம்கொண்ட யானைகள் அதிகம்.....!

வழிதவறி சிக்கிக்கொள்ளாதே.........
உன்னை வதம் செய்தே கொன்றுவிடும்.....!!

-சதீஷ் ராம்கி.

எழுதியவர் : சதீஷ் ராம்கி (12-Mar-16, 5:45 pm)
சேர்த்தது : சதீஷ் ராம்கி
பார்வை : 289

மேலே