போய் சேருகிறேன்

போய் சேருகிறேன்

பேருந்து பயணம் தான் வாழ்க்கை
திசை மாறும் பொழுது
மூன்றாய் இருந்தது
இரண்டாய் மாறும்..

~~~~~~~~~~~~~~~~~~~~

அன்னையாய்
நானும்
உனை அழவே விடமாட்டேன்...
அன்பிலார்
நெஞ்சம் போலே நம்பிக்கை
துரோகம்
இறப்பு வழி
வந்தாலும்
உன்னை விட்டு
நீங்கவே மாட்டேன்


~~~~~~~~~~~~~~~~$₹$₹$₹


பால் நெஞ்சில்
வற்றிபோகும் போது கூட
பட்டினி போடவில்லை
மகனே

ஆனால் இன்றோ
உன் வீட்டு
நாய்க்கு ஊற்றும்
பாலில் ஒரு சொட்டு
கூட
எனக்காக இல்லையா ?
மகனே

நாளையாவது
பாலை வார்ப்பாயா !
என்னால் பார்க்க முடியாது
ஆதலால் பொய் கூட
சொல்லு மகனே...

எனக்காக என் மகன்
இருக்கிறான்
என்கிற
இந்த சந்தோஷத்திலேயே
போய் சேருகிறேன் மகனே.........

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (21-Mar-16, 1:06 pm)
பார்வை : 83

மேலே