கல்லறையில் காதலன் - குமார்

அவளின் மௌனம்
என்னைக் கொண்டுவந்து
சேர்த்ததோ மயானம்
கல்லானதோ அவளின்
அகம்
கல்லுக்குள் போனதோ
என் தேகம்
வளையல் கரங்களோடு
அவள்
வளையில் கரையான்களோடு
நான்
நிறைந்த நித்திரையில்
அவள்
நிரந்தர நித்திரையில்
நான்
என் நிலைக்கு
மதம் காரணமல்ல
அவளின் தாமதமே
காதலைச் சொன்னேன்
கா விட்டுவிட்டாள் என் உயிருக்கு
கடிதம் எழுதினேன்
படித்துவிட்டு
கசக்கி எரிந்தாள் என் மனதை
அவளின் அடக்கம்தான்
என்னை அடக்கம் செய்தது
வாழை மரம் வெட்டிவிட்டால்
வளருமடி
என் வாழ்க்கைமரம்
வெட்டிவிட்டாய் வளருமாடி ?
பூவைக் கொடுத்ததற்கா
சாவைக் கொடுத்தாய் ?
உன்னை கண்ணால் போர்த்தியதற்கா
என்னை மண்ணால் போர்த்தினாய் ?
உன்னைப் பெண்ணென்று
நினைத்தேன்
நீ ஐம்பதுகிலோ எடையுள்ள
மண்ணென்று அறியாது
அறிந்திருந்தால்
நான் கண்மூடிப்போயிருக்கமாட்டேன்
என் உடல் மண்மூடிப்போயிருக்காது
புற்கள் முளைத்திருக்காது
என் கல்லறையில்
பூக்கள் முளைத்திருக்கும்
என் பள்ளியறையில்