விலைமதிப்பில்லா வைரம்

காமாட்சியாக,
ராஜாவாக,
காலா காந்தியாக,
பெரியவராக,
கர்மவீரனாக அழைக்கப்பட்ட,
எங்கள் பச்சை தமிழன்;

விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர்;
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்ததனால்,
கிட்டிய பரிசினால்,
சிறைவாசம் சென்றவர்;

பணத்திற்கு மடியாதவர்;
பாராட்டிற்கு மயங்காதவர்;
பழித்து பேசாதவர்;
முதலமைச்சராய் இருந்தும்,
ஆடம்பரமாய் வாழாதவர்;
அறுசுவை உணவு உண்ணாதவர்;
அன்பளிப்புகளை வாங்காதவர்;
நாட்டிற்கே தலைவனாக,
வந்த வாய்ப்புகளை நிராகரித்து,
'கிங் மேகர்' ஆக திகழ்ந்தவர்;
பள்ளியிலே பயிலாமலே,
பல மொழிகளை பேசியவர்;

இனம் காட்டும் நிறம்;
குணம் காட்டும் உடை;
தைரியம் அறிவிக்கும் உடல்;
வணங்க தோன்றும் முகம்;
தோல்விகள் கண்டு துவலாத உள்ளம்;
தமிழகம் கண்டெடுத்த கருப்பு வைரம்;
படிக்காததனால் தானோ,
தமிழ் நாட்டையே படிக்க வைத்தாரோ!

பசியின் ருசியை உணர்ந்ததால் தானோ,
பாமரக் குழந்தைகளின் பசியை தீர்த்தாரோ!

இவர் ஆண்டது போல் ஆட்சியோ,
இவரை போல் அரசியல் தலைவர்களோ,
நம் நாடு மீண்டும் பெறுமா???

எழுதியவர் : செந்தில் லோகு மா (30-Mar-16, 1:42 pm)
பார்வை : 138

மேலே