அவள் வருவாள் என
கண்கள் காணும் தூரம்வரை
காணவில்லை என்னவளை
தேடுகிறேன் தினம் கனவில்
வாடுகிறேன் அவள் நினைவில்
என் தேடல் அறிந்த அவள்
ஒரு வார்த்தையில்லா காதல் மடல்
ஆயிரம் பேசியும் அவளிடம்
ஏதேதோ சொல்லிட ஏங்கும்
ஏக்கம் கொள்ளும் காதல்
எட்டாத நிலவையும்
எட்டி பிடிக்கும் மனதுடன்
கரைக்கிறேன் எல்லா நாளும்
அவள் வருவாள் என .....