மரத்தடி

காலையில் மேற்கு நோக்கியும்
மாலையில் கிழக்கு நோக்கியும்
இரண்டு பாசஞ்சர் வண்டிகள்
மட்டுமே நின்று போய்கொண்டிருந்த
அந்த புறநகர் ரயில்நிலையத்தின்
அன்றிருந்த ஒரேயொரு பிளாட்பாரத்தின்
ஏழின் கீழ் பன்னிரண்டு என்கிற எண்பொறித்த
புங்கமரம் ஒரு பெரிய விருட்சமாய்
இன்று நிமிர்ந்து நிற்கிறது...
முப்பத்தெட்டு வருடங்களுக்கு
முன்பு நானும் நண்பனும்
தேர்வுக்குப் படிக்கும் காரணம்காட்டி
அதனடியில் கழித்த நாட்களில்
மனப்பாடம் செய்த
லா ஆப் டிமினிஷிங் யுடிலிட்டி
தியரியைக் கூட
மறக்காமல் ஒப்பிக்கிறது..