நட்டநடுக் கடலில்

நட்டநடுக்
கடலில்
நான் நிற்கிறேன்.....
எக்கரையில்
கால் வைத்தாலும்
அகதி என்றொரு
பெயர்
கிடைக்கும்.....!!

திரைகடல்
ஓடி திரவியம்
தேடு என்று
ஒரு பேச்சு உண்டு.....
ஆனால்
இங்கே..... உயிர்
பயம் கொண்டு
என்னுயிர்
காக்க.....திரைமறைவு
வாழ்க்கை
இன்னோர்
தேசத்தில்.....!!

சொந்தங்கள்
பந்தங்கள்
சோகங்கள்
சந்தோஷங்கள்
என்று
எல்லாம் இங்கும்
உண்டு.....ஆனாலும்
இந்த
அந்நிய தேச
வாழ்வு.....வாழ்க்கை
அல்ல.....!!

எழுதியவர் : thampu (7-Apr-16, 10:02 am)
பார்வை : 105

மேலே