தென்றல்

தென்றல் வந்து என்
தேகம் தொடும்போது
தெளிவடைந்தது மனம்;

தேடியலைந்த நிம்மதி
தேனெனப் பாய்ந்து
வந்தது;

தென்றலுக்கு மட்டும்
என்ன அப்படி ஒரு
சக்தி?

தன்பால் ஈர்த்துத்
தாலாட்டும் தாய்மை

எழுதியவர் : முழக்கம் பாலு (8-Apr-16, 6:05 pm)
Tanglish : thendral
பார்வை : 2986

மேலே