என்னுள் நிசப்தமாய் நின்றவள்

என்னுள் ஒலிக்கும்
நிசப்தத்தின் இசை நீ!!!

ஆழமாய் என்னுள்,
என்னுள்ளே
பொங்கிப்பிரவாகிக்கும்
இசைப்பிரவாகம் நீ!!!

எங்கோ
காற்றினில் கலந்துவரும்
இசையின் சுகம் போல...
உன் நினைவுகள்!!!

இந்தப் பிரபஞ்சப்புள்ளியில்
ஒரு சிறு,
மிகச்சிறு புள்ளியாய்
இருக்கும் எனக்கு
நீ தான் பிரபஞ்சம்!!!

என் கவிதைகள்
ஒரு கிறுக்கல்கள் தான்...
ஒரு குழந்தையின் கிறுக்கல்கள்
யாருக்கு தான் புரியும்???
ஆனால் அதை ரசிக்க
ஒரு தாய்க்கு தெரியும்...

என் கிறுக்கல்களை ரசிக்க
உனக்கு தான் தெரியும்!!!

எத்துனை சொற்களிருந்து
என்ன பலன்???
சொல்லமுடியாத உணர்வுகள்
உள்ளத்தில் ஆயிரம் இருந்து
மொழிகளின் வெறுமையினை
உணர்த்திவிடுகின்றன...

சில நேரங்களில்
நிசப்தங்கள்
என்னை
என் உணர்வினை
உணர்த்திவிடுகின்றன...

இன்னும்நான்
ஆழ்ந்து பார்கிறேன்..
என் நிசப்தமெல்லாம்
நீயாகி நிற்கிறாய்!!! - சௌந்தர்

எழுதியவர் : சௌந்தர் (17-Apr-16, 12:36 am)
பார்வை : 87

மேலே