மழலை மனம்...


எல்லாவற்றையும் மறக்க நினைக்கிறேன்...
எல்லாரையும் மன்னிக்க நினைக்கிறேன்...

அறுப்பட்ட நூலிலிட்ட-
முடிச்சின் உறுத்தல் போல,

காயத்தின் காயத்தின்-
தழும்பின் வடுவினைப் போல,

மன்னித்தாலும்,
மறக்க மறுக்கிறது...
மனம் புனைந்த மானம்...
மானம் மறைக்கும் மனம்,

மதலையின் மனதை-
தக்கவைப்பது...
எளிதா என்ன?

எழுதியவர் : ரமண பாரதி (18-Jun-11, 7:51 pm)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 391

மேலே