பலருக்கு கிடைக்காத உலகம்

கிராமிய உலகம் மிக ரம்யமானது
கடக்கும் ஒவ்வொரு கணமும் கவிமயமானது
தொழில் நுட்பம் தொடாததால் உண்மையானது
பேசும் பேச்சுக்களில் வெகுளியானது
போடும் சண்டைகளில் ரசனையானது
பிறக்கும் காதல்களில் இனிமையானது
கால்நடைக்கும் ஐந்தறிவிற்கும் பிடித்தமானது
வாய்க்காலும் வரப்புமேடும்
பனைமரமும் தென்னைமரமும்
குயிலும் மயிலும் ஓடிவிளையாடும் இயற்கையானது
ஓயாத பாட்டி பேச்சிலும்
விடாத தாத்தா கேலியிலும் அன்புமயமானது
கிராமிய உலகத்திற்கு பொய் சொல்லத்தெரியாது
இல்லை பொய்யே தெரியாது
படிப்பறிவும் செல்வமும் மட்டுமே குறைவு
அதைத்தவிர அத்தனையும் இந்த கிராமிய உலகில்
நிறைவே... நிறைவே.. நிறைவே...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Apr-16, 9:17 am)
பார்வை : 1795

மேலே