குறும்பா

உறங்கியது வீதி
விழித்திருக்கிறது
தெரு விளக்கு

***********************************

சிதறியது சில்லறை
தேட முடியவில்லை
போட்டது குருடன் வேடம்

****************************
படகுப் பயணம்
மறையும் நிலவு
ஆற்றைக் கிடக்கும் இரவு
***************************

உடைந்தது சவர அலகு
கன்னத்தில் ரத்தம்
கோபத்தில் மீசை

*******************

ஓய்வூதியப் பணம்
உற்சாகமாக கரைகிறது
ஊதாரி மகன் கையில்
***************************

எழுதியவர் : சிவநாதன் (28-Apr-16, 10:32 pm)
பார்வை : 285

மேலே