10 செகண்ட் கதைகள் - சீட்டு இல்லை
முருகேசுவும் குமரேசுவும் இனிமேல் செல்போன் உபயோகிக்ககூடாது என்று முடிவு எடுத்தனர்.
ஒரு புறாவை வாங்கி அதன் காலில் துண்டு சீட்டில் எழுதிய செய்தியை கட்டி பறக்கவிடுவார்கள்.
முருகேசுவின் வீட்டில் பறக்கவிட்டால் அது குமரேசு வீட்டுக்குப் போகும். அதுபோல குமரேசுவின் வீட்டில் பறக்கவிடப்பட்டால் அது முருகேசுவின் வீட்டுக்குப் பறந்து போகும். அப்படி பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது அந்தப் புறா.
எல்லா நல்லபடியாக நடந்துகொண்டிருந்தது.
ஒரு நாள் அந்தப் புறா முருகேசு வீட்டுக்கு வந்தது. ஆனால் அதன் காலில் செய்தி சீட்டு இல்லை.
முருகேசு கடும் கோபம்கொண்டார். உடனே ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு குமரேசு வீட்டுக்கு சென்றார்.
“மிஸ்டு கால் விடும் பழக்கத்தை நீ இன்னும் விடவில்லையா?. முட்டாள்” என்று திட்டிவிட்டு வந்தார்.