சலாவு 55கவிதைகள்

என்னவளே ஏந்திழையே ..
பெண்ணழகே பேரழகே ..
என்னருகே நீ இல்லை என்றே ..
என் ஏக்கங்களும் என் மீது கோபமாய் ..
என் சுவாசமும் எனக்கு சாபமாய் ..
.
அழகியலே விழியியலே ..
ஆண் கலை படித்த அறிவியலே ..
ஆழ்ந்த தூக்கம் தொல்லை என்றே ..
ஆழ் மனதும் விழிக்குதடி ..
அங்கும் இங்கும் கொஞ்சம் துடிக்குதடி ..
.
சொல்லழகே மொழியழகே ..
வில்லேந்தும் விழியழகே ..
துடிக்கும் இதயம் நின்னு போச்சி ..
தூரப்பிரிவும் இங்கு துயரமாச்சி ..
துன்பம் சுமையும் கூடிபோச்சி ..
.
வா அழகே சேர்ந்திடவே ..
வசந்த காலம் வாழ்த்திடவே ..
கசந்த காதல் இனிமையாச்சு ..
காதல் கனிந்து வாழ்க்கையாச்சி ..
காலமெல்லாம் இனி காதல் கிளி பேச்சி ..
..............................................................
உன் விழியின் மொழியில் ..
என் காதலின் தேடல் ..
.............................................................;-சலா,

எழுதியவர் : (7-Jun-16, 3:05 am)
பார்வை : 63

மேலே