உன்னை பிரிந்து என்னால் சிறுபொழுதும் இருக்க முடியாது

என்னனு தெரியல
உன்ன பாக்கணும் போலருக்கு
உங்கிட்ட பேசணும் போலருக்கு
எங்கிட்ட வந்திடு

~ பிரபாவதி வீரமுத்து



அதுக்கு முன்னாடி
போய்டுவனோனு
பயமா இருக்கு
உன் மடியில இருக்க வேண்டிய தல
தலையணையில கிடக்கு
உன்ன பிடிக்க வேண்டிய கை
தலையணைய கட்டிபிடிச்சிட்டிருக்கு

~ பிரபாவதி வீரமுத்து

*************************


என் உயிரை பிரிந்து
கிடக்கும் இரவுகளில்
தூக்கம் இன்றி தவிக்கிறேன்
செயற்கையாக தூக்கத்தை வாங்கிவிடலாம் என்று
எடுத்துகொண்டேன்
ஒற்றை தூக்கமாத்திரை

கண்ணில் ஒரு
பொட்டு தூக்கம் கூட எட்டிபார்க்கவில்லை

இன்னும் ஒன்று
வரவே இல்லை தூக்கம்

இன்னும் ஒன்று
எந்த ஒரு மாற்றமும் இல்லை

இன்னும் ஒன்று
தூக்கமே இல்லை
நெஞ்சு வலி கூடுகிறது

இன்னும் ஒன்று
கதவை தட்டும் சத்தம்
ஆனந்த கடலில் மூழ்குகிறேன்
அவர் வந்துவிட்டார்
எனை அணைத்துவிட்டார்

இப்பொழுது தான் காலதேவன் எனை தூங்க வைக்கிறான்
அவர் மார்பில்

அவரிடம் தூக்கம் வருகிறது
வாங்க தூங்கலாம்
என்றேன்

இருவரும் படுக்கையில்
படுத்தோம்
நான் அவர் மீது வீழ்ந்தேன்
பின் நகர்ந்து படுத்தேன்
அவர் தூங்கிவிட்டார்
நான் கையை பிடித்துக்கொண்டேன்...
எங்கே என் எச்சில் அவரை எழுப்பிவிடுமோ என்று பயந்து
நான் அந்த புறமாக
அவர் இந்தபுறமாக
இருக்க திரும்பிவிட்டேன்
எங்கள் அந்தபுரத்தில்

கண் மூடுகிறேன்
ஒரு முறை அவருடன்
வாழ்ந்து விட வேண்டும்
என்று துடிக்கிறேன்
ஆனால் இது தாமதம்

நெஞ்சு வலிக்கிறது
வாழ்க்கை முடியக்கூடாது கடவுளே
வாயிலிருந்து இரத்தம்
கொட்டுகிறது

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்
நான் வாழப்போவதில்லை
சாகபோகிறேன்

மீண்டும்
அவர் அருகில்
நகர்ந்து சென்று
அவர் மார்பில் தலை வைத்து
கை போட்டு தூங்கிவிட்டேன்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (7-Jun-16, 9:16 am)
பார்வை : 177

மேலே