என் நினைவாய்

என்னையறியாமல் நான் நடக்கிறேன்...
அவளை தேடி வருகிறேன்...
அவள் விழி நானும் கண்டதில்லை..
அவள் வழி நானும் செல்வதேன்...
வாசம் நீயும் எங்கே...
என் சுவாசம் தானே அங்கே....
உதடு அசைத்திடவில்லை...
என் வார்த்தை உணர்வுதான் எங்கே.
உயிரும் எங்கே துடிக்கிறது...
உறவு எங்கே இருக்கிறது...
இதயமிங்கே இடம் மாற....
என் இமையும் இங்கே திறக்கிறதே..
வாழ்வில் வசந்தம் தந்திட...
என் நினைவும் உனக்கே வாழ்கிறதே...

எழுதியவர் : (7-Jun-16, 9:44 am)
Tanglish : en ninaivay
பார்வை : 88

மேலே