ஆதரவற்றோர்
தந்தையை பறித்துக் கொண்டாய்
தாயையும் பறித்துக் கொண்டாய்
என்னை அனாதையாய்
ஆக்கிவிட்டாயே!
நியாமா!உனக்கே தகுமா!
இறைவா!
நாங்கள் அனைவரும்
இறைவனின் பிள்ளைகளாம்!
எங்கள் பசிபோக்க யாரும் இலர்!
அறிவதில்லை மக்கள் பலர்!
இப்படி இருப்பதற்கு
இறப்பதே மேல்!
இது வார்த்தை அல்ல!
எங்கள் வாழ்க்கை!