எண்ணத் துளிகள்

விடியும் வரைக் காத்திரு
அவன் மறைய விடியல் வந்திடும்
நீ பூத்திடுவாய்......


முடியும் வரை மௌனித்திரு
அவன் கரைய இருள் சூழ்ந்திடும்
நீ மலர்ந்திடுவாய்......


நீரிலே இருந்தாலும் மௌவல்
அழுகும் நிலை வாராது...
வானவில்லாய் கலையும் சினத்தால்
மனதில் வன்மங்கள் தோன்றாது......


மலர்ந்திடும் மலர்களின் வாசனை
காற்றில் கலப்பது இயல்பானது...
உள்ளுக்குள் வலிகள் மறைத்து
வெளியில் மெய்யாய் சிரிக்க இய்லாது......


முகிலின் மழைத்துளி மண்ணில் விழுந்து
விருட்சங்கள் பல செழிப்பில் ஆடுது...
கண்களின் நீர்த்துளி கன்னங்களில் வழிந்து
நெஞ்சங்கள் பல சோகத்தில் வாடுது......


தினம் ஒரு கோலத்தில்
வீட்டின் வாசல் அழகுப் பெறலாம்...
நித்தம் ஒரு ஆசை கொண்டால்
உள்ளம் என்றும் அமைதிப் பெறாது......


மலரும் மொட்டுக்கள் மரணம் நினைத்து
சோர்ந்து போயிருந்தால்
பிறவிப் பலனை அது அடைந்திடாது......


முடியாது என்று நினைத்து
முயற்சி செய்யாதிருந்தால்
விதை விருட்சமாகி கனிகள் தந்திடாது......


விழிகள் மூடிக் கனவுக் கொண்டு
உழைக்காது இருந்தோம் என்றால்
வெற்றியை வாழ்வில் காணவே இயலாது......


முழு நம்பிக்கைக் கொண்டு
முடியும் என்றுப் போராடினால்
முடியாதென்று ஒன்றுமில்லை......
மரணத்தைக் கண்டு அஞ்சாத
மலர்களாய் நாம் மலர்வோம்......

எழுதியவர் : இதயம் விஜய் (13-Jun-16, 6:37 pm)
Tanglish : yennath thulikal
பார்வை : 146

மேலே