உன் நினைவுடன்

ஒருமுறை தான் இல்லையென்றேன்................
சொல்லிய கனம் உன்பாடு
தெரியவில்லை ...................

ஆனால்

ஒருமுறை உன்னை எண்ணினாலும்
தொண்டைக் குழியில் ஏதோ
சிக்குகிறது..................

புயலில் சிக்கிய மரம்போல்
என் நெஞ்சம் நிலையின்றி
படபடக்கின்றது.......................

இது ஏனென்று எனக்கும்
தெரியவில்லை .....................
நான் படும்பாடு உனக்கும்
தெரியப்போவதில்லை..................


என்றும் உன் நினைவுடன்...................

எழுதியவர் : புகழ்விழி (15-Jun-16, 7:13 pm)
Tanglish : un ninaivudan
பார்வை : 1271

மேலே