அந்த மூன்று நாட்கள்

அந்த மூன்று நாட்களில்
என் கணவர்
என் கால்களை பிடித்து விடுவார்
இடுப்பை நீவி விட்டு
கைகளை அமுக்கி விட்டு
மடியில் எனை போட்டு
தாலாட்டு பாடி தூங்க வைப்பார்


அந்த மூன்று நாட்களில்
மனைவியை எதிரி போல் பார்க்கும் கணவன்களிடமிருந்து
என் கணவர் வித்தியாசமானவர்

இப்படி பட்ட கணவர் கிடைப்பதற்கு

என்ன தவம் நான் செய்தேன்?


~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (19-Jun-16, 9:22 am)
பார்வை : 250

மேலே