இனியும் தாங்காது இந்த புஞ்சை மனம்

என் உதடுகள் காய்கிறது. ..
உள்ளமும் கூட. ..

நீர் இல்லாமலா...-இல்லை. .
நீ இல்லாததால். ..

ஆலம் இலை போல் காய்கிறதே..
ஆளில்லாமல் போனதேனோ..

புஞ்சை நிலத்து வறுமையானேனடி...
நஞ்சை நிலமாக மாற நிந்தன் வருகை வேண்டுமடி...

நஞ்சை மட்டும் விதைக்காதே-உந்தன்
நாவை கொண்டு. ..
இனியும் தாங்காது இந்த புஞ்சை மனம். .. !

எழுதியவர் : மோகன் சிவா (22-Jun-16, 12:57 am)
பார்வை : 107

மேலே