பிரம்மாவிடம் மனு•••

வாருங்கள் எல்லோரும்
காலனுக் கெதிராய்
மனு கொடுப்போம் !

அவன் சாகாமல்
இருப்பதால் தானே !

நமக்கெல்லாம்
சாவு வருகிறது !

அவன்
செத்துப்போனால்
நமக்கேது இனி சாவு !

எத்தனை காலம் அந்த
காலனை விட்டு வைக்க !

வாருங்கள் எல்லோரும்
காலனுக் கெதிராய்
பிரம்மாவிடம் சென்று
மனு கொடுப்போம் !

எழுதியவர் : ஆப்ரஹாம் வேளாங்கண்ணி mumbai (22-Jun-16, 12:47 pm)
பார்வை : 75

மேலே