எவனும் உதவிக்கு வரமாட்டான் ஸ்வாதி

தினமும் ஆறு மணிக்கு ரயில் வந்துவிடும் ..அன்று ரயிலும் வந்தது ...அவள் ஏறவில்லை..

ஒருவனோடு உரையாடி கொண்டிருக்கிறாள் உரையாடல் வாக்குவாதம் ஆனது .சுற்றி இருப்பவர்கள் ரயிலை பார்ப்பது போலவே அவர்களையும் பார்த்து கொண்டுதான் இருந்தார்கள் ..
தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணின் தாடையில் குத்தி கிழிக்கிறான்.பற்கள் சிதறுகிறது .மக்கள் கூட்டமும் சிதறுகிறது ரத்த வெள்ளத்தில் துடி துடிக்க இருக்கிறாள் இன்னும் இறக்கவில்லை .

சாப்பிட்டு முடித்து உணவகத்தில் இருந்து கிளம்புவது போல் அவன் அங்கு இருந்து கிளம்புகிறான் ..மக்கள் இன்னும் திகைப்பில் ஆழ்ந்திருக்கின்றனர் மீண்டு வந்து அவர்கள் அந்த பெண்ணை ஏறெடுத்து கூட பார்க்கவில்லை .. உயிர் பிரிகிறது .. படத்தில் வரும் காவல்துறை போலவே கடைசியில் வருகிறார்கள் .அவர்கள் தன் வேலையை செய்கிறார்கள் ..அப்பொழுதும் மக்கள் வேடிக்கை தான் பார்க்கிறார்கள் ..


எங்கேயும் எப்பொழுதும் யாருக்கும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் .. எவனும் உதவிக்கு வரமாட்டான் என்கிறாள் ஸ்வாதி ..!!!

எழுதியவர் : அருண்வாலி (26-Jun-16, 5:23 pm)
சேர்த்தது : அருண்ராஜ்
பார்வை : 353

மேலே