வாய்த்தவளைக் கண்டு வழிந்திட்டான்
மலரொன்றின் இதழ் விரிந்திருக்க
--மங்கையவள் தலை கவிழ்ந்திருக்க
மாலைநேரம் இருள் கவ்வியிருக்க
--மாண்டவர் பூமியாய் சூழலிருக்க
காரணத்தை அறிந்திட மனம்துடிக்க
--காலம் கனியுமென காத்திருக்க
காதலின் நிலையென நினைத்திருக்க
--காதலுனும் இன்னும் வாராதிருக்க
காத்திருக்கும் அவனுக்கோ படபடக்க
--அமைதியே அங்கு நிலைத்திருக்க
அணங்கவள் சற்றும் அசையாதிருக்க
--ஆண்களுக்கே உரிய அவசரமிருக்க
ஆத்திரமோ பொங்கி வழிந்திருக்க
--வினவியும் பதில் உரைக்காமலிருக்க
விடியும்வரை அவனும் காத்திருக்க
--முடிவாய் காதலன் முணுமுணுக்க
முல்லைச் சிரிப்பையும் அவளுதிர்க்க
--வாயடைத்து நின்றான் வாலிபனவன்
வாய்த்தவளைக் கண்டு வழிந்திட்டான் !
பழனி குமார்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
