கண்ணீர்

நாம் வாழ்க்கையில்
மகிழ்ச்சியாக இருந்தாலும்
துக்கமாக இருந்தாலும்
சட்டென துளிர்ப்பது
இந்தக் கண்ணீர்தான்...
எதோ ஒரு விஷயத்திற்காக‌
தோற்றாலும் ஜெயித்தாலும்
முதலில் வருவது
இந்தக் கண்ணீர்தான்...
குழந்தைகள் தன் தேவையை
பூர்த்தி செய்து கொள்வதும்
இந்த கண்ணீரில்தான்...
பிறப்பு முதல்
இறப்பு வரை
கூடவே வருவதும்
இந்தக் கண்ணீர்தான்..

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (8-Jul-16, 8:17 pm)
Tanglish : kanneer
பார்வை : 114

மேலே