தர்மம் பிழைக்காது•••
இன்னொருவர் சுமையை
தான் சுமந்து பார்த்தால்
ஞானம் பிறக்கலாம்!
தன்னுடைய சுமையை
இன்னொருவர் மேல் சுமத்தும் தானே விழுந்திடலாம் !
ஞானம் பிறந்தவர்கள்
எத்தனைப் பேர் அது
நானில்லை நீயே !
தானே விழுந்தவர்கள்
எத்தனைப் பேர் அது
நீயில்லை நானே யென
ஏற்பவர் இருந்து விட்டால்
கத்தியும் இருக்காது துளி
ரத்தமும் சிந்தாது !
நாடே என் வீடென
வீடே என் நாடென
கொண்டுவிட்டால் ஒரு
ஊழலும் பிறக்காது சிறு
துரும்பையும் இழக்காது !
இந்த நாட்டையே காடாய்
காட்டையும் பணமாய்
ஆக்கிக்கொண்டால் அங்கே
தர்மம் பிழைக்காது !
அடிமேலடியடிக்க
அம்மியே நகர்ந்தாலும்
லஞ்சம் லாவண்யம்
இம்மியும் நகராது !