நானறியேன்

தினம் ௨ன்னை நேரில் பார்க்கையில்
ஏதேதோ பேச வேண்டும் என தோன்றும்
ஆனாலும் ஏதோ வந்து தடுக்கும் ௮து நாணமா? வெட்கமா? நானறியேன்

உன்னைக் கண்ட நாள் முதல்
என்னுள் நானறியாமலே வந்திட்ட காதலை
உனக்கு எப்படிச் சொல்வேன்
அதையும் நானறியேன்

உன்னோடு பேசும் போதெல்லாம்
நான் முழுங்கிடும் வார்த்தைகளை
என்று உனக்கு தெரிவிப்பேன்
அதையும் நானறியேன்

நான் அறிந்ததெல்லாம்
உன்னைத் தான்
உன் மீது கொண்ட காதலைத் தான்
அதை நீ ௮றிவாயா???

எழுதியவர் : துவாரகா (5-Aug-16, 11:34 am)
Tanglish : naanariyen
பார்வை : 135

மேலே