மலர்கள்
வண்ண மலர்களை
காணும் போது
என் எண்ணங்கள்
சிறகடித்து பறக்குதடி!
ஓர் நாளே வாழ்ந்திடினும்
உன் வாசத்தை
என் சுவாசத்திற்குள்
புகுத்தி போகிறாயடி!
உன்னை காண்கையிலே
என் மனது கேக்கிறது
உன் வாழ்நாளில் நீ
என்ன செய்தாயென ?