ஒன்றின்றி ஒன்றில்லை

நீரின்றி நதியில்லை
நிலவின்றி வானில்லை
நிலமின்றி புவியில்லை
மனமின்றி மனிதனில்லை
மனிதனின்றி பூமியில்லை
மரணமின்றி வாழ்வில்லை
உருவமின்றி உடலில்லை
உணவின்றி உயிரில்லை
உயிர்களின்றி உலகில்லை
கவலையின்றி மக்களில்லை
கருமேகமின்றி மழையில்லை
கசப்பின்றி வாழ்க்கையில்லை
அறியாதவர் எவருமில்லை
புரியாதவர் பூமியிலில்லை
எழுதாத கவிஞருமில்லை ....
பழனி குமார்