அவள்
உன் நெற்றியில்
வெற்றிடம் நிரப்பாமல்
உள்ளது ....
என் உதட்டில்
பூக்கும் முத்தங்களை
நிரப்பி விடவா ......
உன் மூக்கின் நுனி
கொண்டு ஒராயிரம்
கவி எழுதி விடவா...
உன் இதழில் ரேகைகள்
என் ஆயுள் ரேகை
எண்ணி விட முடியவில்லை .....
உன் இரு கண்கள்
மின்சாரம் உற்பத்தியாகும்
இடம்
நெருங்கி விட முடியவில்லை....
உன் உடலோ
ஏறி இறங்கும்
தங்க விலை ...
உன் காலடி தடங்கள்
நான் உன்னை
பின் தொடர
நீ விட்டு சென்ற தடயங்கள் ....
என்னை உன் பின்
வரவைக்க
நறுமணம் பரப்புகின்றன
உன் கூந்தல் பூக்கள் ...
உன் துப்பட்டாவின்
தழுவல்கள்
என் வாழ்வின்
மோட்சங்கள்.....