மற்றொரு நாளில்
இப்பொழுது விட்டுவிடுங்கள்
பிறிதொரு நாளில்
பேசிக் கொள்ளாலாம்.
பௌர்ணமி இரவு
கடற்கரையில் சந்திப்போம்.
வண்ணங்கள் எண்ணங்களை மாற்றலாம்.
அகங்காரத்தின் அத்தனை
முகங்களையும் காட்டாதீர்கள்.
வசவுளைப் பற்றி உங்களுக்கு
தெரியாமல் இருக்கலாம்.
நீங்கள் எவ்வளவு கேவலமானவர்கள்
என்று எங்களுக்குத் தெரியும்.
வாய் விட்டு வந்து விழுந்த
வார்த்தைகளின் அர்த்தங்களை
புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் மனிதராக மாறும்
வாய்ப்பு அப்பொழுது உள்ளது.
இல்லையனில்....?