நான் தேடும் கடவுள்
பூதங்கள் ஐந்து
நிலம்,நீர்,நெருப்பு,
வான் மற்றும் காற்று
இவ்வைந்தில் காற்றை
கண்டார் உண்டோ
இல்லை என்பேன்
வானைக் கண்டார் உண்டோ
இல்லை என்பேன்
காற்று தீண்டும் போது
காற்றை உணர்ந்தேன்
வானைக் கண்டேன் இல்லேன்
அந்தரத்தில் ஆடுகின்ற
கோள்கள், தாரகைகள்
வானை உணர்த்த கண்டேன்
இறைவனைக் கண்டேன் அல்லேன்
குழந்தை சிரிப்பில், மழலையில் ;
தாயின் அன்பில், அரவணைப்பில்
உண்மையே பேசுவோரிடமும்
ஆண்டவனை நித்தமும் நான் உணர்கின்றேன்
நாத்திகரே இறைவனை எங்கு தேடி அலைகிறீர்
" இருக்கும் இடம் விட்டு இல்லாத இடமெல்லாம் "