பாவையும் பறவையும்

பாவையும் பறவையும்

தேவதை என்று மருவி
தோள் மீது ஏறிய குருவி
கண்டதோ பொன்னிற அருவி
தலையில் கொண்டதோர் சிறுமி

விரலில் ஏறிய பறவை
விரித்துத் தந்தது உறவை
பிரிந்திடும் எண்ணம் மறைய
மவுனச் சிலையாய் உறைய

பளிங்கு மேனிப் பொலிந்து
கனவு நிலையில் மெலிந்து
மோனம் மெல்ல வழிந்து
மோட்சம் அளித்தது பிழிந்து.

எழுதியவர் : தா. ஜோ. ஜுலியஸ் (24-Aug-16, 3:50 pm)
பார்வை : 67

மேலே