அழுகை

குழந்தைகளின் ஆயுதம்
கண்களின் சுத்திகரிப்பான்

உடல் வலித்தாலும் வரும்
உள்ளம் வலித்தாலும் வரும்

பிரிவின் போதும் வரும்
பிரிந்தவர்கள் சேரும் போதும் வரும்

இதற்கு ஆண் பெண் பேதமில்லை
எல்லோருக்கும் சமமானது

திரைக்காட்சியில் அழுகவைப்பவனும் ஜெயிக்கிறான்
சிரிக்கவைப்பவனும் ஜெயிக்கிறான்...

தொலைக்காட்சியில் பெரும்பாலும்
அழுக வைப்பவனே நடத்துகிறான் ஆட்சி...

கதை மூலமும் கவிதை மூலமும் அழுக வைப்பவன்
மிகச் சிறந்த படைப்பாளியாகிறான்..

விலங்குகளுக்கும் கண்ணீர் வரும்
பறவைகள் அழுது பார்த்ததில்லை..

மேகம் அழுதால் பூமியே சிரிக்கும்...
சிரிப்போடு கூட வரும் அழுகை மிக மேன்மையானது...

அழுகை கூட அழகாகிறது
பாசத்தில் வெளிப்படும் போது...

ஒருவனுக்காய் ஊரே உலகே அழும்போது
அவன் வானில் தலைவனாய் ஜொலிக்கிறான்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Aug-16, 7:45 am)
Tanglish : azhukai
பார்வை : 1070

மேலே