காதலுக்கு ஓய்வா
இன்று ஏன் இந்த மௌனம்
என் காதலியே என்று கேட்டேன்
மௌனத்தில் அவள் அபிநயித்து
ஒன்று தெரிவித்தாள், அது
எனக்கு புரிந்தது, அதுதான்
இது ," இனிப்பே உணவு என்று
உண்டு வந்தால் ,இனிப்பு
அலுப்பு தரும் , அது என்றும்
அமுதாய் இருக்க ,இடையில்
இனிப்பு உண்பதை சிறிது
தவிர்க்கலாமே".
" காதலுக்கும் ஓய்வு தேவை
காதல் புத்துணர்ச்சி பெற"
இது தான் அவள் பாடிய
மௌன ராகம் அபிநயித்து .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
