போதி மரம்

யானை முகத்தோனுக்கு,
இனிய கோயிலளித்து...

யாகத்திற்கு,
இணையில்லா சமித்தளித்து...

யாசகனுக்கு,
இடமளித்து...

யாத்ரீகனுக்கு,
இளைப்பாறலளித்து...

யாருமற்றவனுக்கு,
இருப்பையளித்து...

யாது ? யாது ? என்றவனை,
இகபரமழித்து-
திகம்பர புத்தனாக்குகிறது....

எழுதியவர் : ரமண பாரதி (28-Jun-11, 12:39 am)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 462

மேலே