கருப்பு வெள்ளை

ஒரு பெரிய ஆலமரம் அந்த ஆலமரத்தில் ஒரு காகம் தன் இரு குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது.
தாய்காகம் தினமும் காலையில் தன் கூட்டை விட்டு வெளியேறி இரை தேடிவந்து தன் இரு குஞ்சுக்களுக்கும் பகிர்ந்து ஊட்டி அவைகளை மிகவும் பாசத்தோடு வளர்த்து வந்தது.
குஞ்சுகளும் மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்று வந்தது. அதே ஆலமரத்திற்கு
தினமும் மாலை வேளையில் ஒரு கொக்கு கூட்டம் தன் குஞ்சுக்களுடன் இரவு தங்கியிருந்து விடிந்ததும் இறைதேட புறப்பட்டுவிடும். சில கொக்கு குஞ்சுகள் மட்டும் மரத்திலேயே தங்கிவிடும்.
இப்படியே நாட்கள் நகர்ந்துக்கொண்டிருந்தது, ஒரு நாள்
இரண்டு காக்கை குஞ்சுகளும் தன் கூட்டை விட்டு கீழே வந்து தன் தாய் சொல்லிகொடுத்தது போல் சிறிது சிறிதாக பறக்க பழகிக்கொண்டிருந்தது. இதை பார்த்த கொக்கு குஞ்சுகளும் கீழே வந்து காக்கை குஞ்சுகளுடன் சேர்ந்து விளையாட தொடங்கியது.
காக்கை குஞ்சுகளுக்கு கொக்கு குஞ்சுக்களின் வெண்மை நிறத்தை பார்த்ததும் ஒரே ஆச்சரியம், என்ன ஒரு வெண்மை அதன் வெண்மை நிறத்திற்கு ஏற்றது போல் மஞ்சள் நிற கண்களும் நீண்ட அலகும் அவைகளுக்கு மேலும் அழகு சேர்த்தது.
மாலை நேரம் வரை விளையாடிய குஞ்சுகள் தன் தாய் வருவதை பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அதனுடன் இணைந்து தன் கூட்டுக்குள் சென்றுவிட்டது.
இந்த முறை தாய் காகம் சொன்னது
குழந்தைகளே உங்களை நான் என்னுடன் இரைதேட அழைத்து செல்லபோகிறேன் உங்களுக்கு எப்படி இரைதேடுவது என்ற விதங்களை சொல்லித்தருகிறேன் பிறகு உங்களின் இரையை நீங்களே
தேடிக்கொள்ளவேண்டும் என்றது.
ஒரு காக்கை குஞ்சு மட்டும் தன் தாய் சொன்னதை எதுவும் கேளாமல் எதையோ பறிக்கொடுத்தது போல் இருந்தது.
இதையறிந்த தாய்காகம் தன் குஞ்சிடம் ஏன் இந்த நிலை என்ன ஆனது உனக்கு என்று கேட்டது.
அப்போது அந்த காக்கை குஞ்சு சொன்னது... ஏம்மா நான் கருப்பாக
இருக்கிறேன் அந்த கொக்குவை போல் ஏம்மா நான் வெள்ளையாக பிறக்கலை என்றது. இதை சற்றும்
எதிர்பார்க்காத தாய் காகம் தன் இரு
குஞ்சுகளையும் அழைத்து பேசத்தொடங்கியது...
குழந்தைகளே நாம் எல்லாம் இறைவன் படைப்பு இறைவன் படைப்பில் எல்லோரும் சமம். மேலும் தாய்காகம் சொன்னது நம் உடல் மட்டும் தான் கறுப்பு நம்முடைய உள்ளம் அந்த கொக்குவின் நிறத்தை விட வெண்மையானது ஏனென்றால் மானுட குலத்திற்கே ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் நம் இனத்தை தான் சொல்கிறார்கள், ஒரு சிலருடைய மூதாதையர்களாவே நம்மை பாவித்து நமக்கு உணவளிக்கிறா்கள் ஆகவே கறுப்பு வெள்ளை என்பது வெறும் வெளித்தோற்றம். உள்ளத்தில் உள்தோற்றத்தில் யார் ஒருவர் வெள்ளையாக இருக்கிறார்கள் என்றால்..
பிறர் அழுகிற ஒலி எப்போது தன் ஆன்மாவுக்குள் ஒலித்து தான் அழுவது போல் உணர்கிறார்களோ
அவர்களே உண்மையான வெள்ளை உள்ளம் படைத்தவர்கள். ஆகையால் நாம் வெளியில் கறுப்பாக இருந்தாலும் உள்ளத்தில் வெள்ளையாக இருக்கிறோம் மயக்கம் வேண்டாம் என்று தன் குஞ்சுகளுக்கு தெளிவுபடுத்தியது.
புரிந்துக்கொண்ட குஞ்சுக்களும் தாயோடு சேர்ந்து இரைதேட பறந்தது..

எழுதியவர் : செல்வமுத்து.M (7-Oct-16, 10:09 am)
Tanglish : karuppu vellai
பார்வை : 263

மேலே