உனக்கு அடிமையடி

உன்கண்களின் சிரிப்புக்கும்
குழந்தை கொஞ்சலுக்கும்
உன் ஓரப்பார்வைக்கும்
நான் அடிமையடி...

காதல் மொழிகளிலே
விழி மொழி புரியாமல்
சிக்கி தவிக்கும் கவிகளில்
நானும் ஒருவனடி
உன் அடிமையடி ...

உன்னிடம் காதல் சொல்ல
ஒத்திகை சில பார்த்து
வெக்கத்தை கொஞ்சம் சேர்த்து
உன்னை நேரில் காண்கையிலே
மொத்தமாய் நான் மறந்து
ஊமையாய் மாறி நின்று
நான் தவித்திடும் தவிப்பை கண்டு
நீ சிரித்திடும் அழகுக்கு
நான் அடிமையடி ...

உன் வீட்டார் சம்மதமும்
என் வீட்டார் சம்மதமும்
இல்லாத ஒரு திருமணம்
உன் மனம் விரும்பாது
என்பதை நான் அறிந்து
உனக்கென காத்திருந்து
என்றாவது கைகூடும்
என எதிர்பார்த்திருந்து
என் காதலும் உனக்கு அடிமையடி ....

எழுதியவர் : ருத்ரன் (7-Oct-16, 8:38 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 165

மேலே