காதல் வளர்த்திடவே

அவளின் மௌனங்களை
நான் புரிந்து கொள்ள
இரு ஜென்மம் வேண்டுமென்று
பிரம்மனை கேட்டிடவா .????


காதல் வளர்த்திடவே
கண்கள் பார்த்திருந்தால் போதுமென
தவறாய் நினைத்துவிட்டேன்
மனதினை நான் படிக்க
நிஜமாய் தவறி விட்டேன்

கனவுகள் நிஜமென்று
கனவு கண்டவன் நான்
நிஜங்கள் கனவாகி
நிஜமாய் சரிந்தவன் நான்

சிரித்த சிரிப்பில்
சிந்தனை இழந்தவன் நான்
அவள் முறைத்த பார்வைக்கும்
காதல் என அர்த்தம் கொண்டவன் நான்

நேசம் பொதுவென்று
பாசமாய் செய்த அனைத்தும்
வேசமாய் போனபின்பு
எனக்கொரு வாழ்வெதற்கு

எழுதியவர் : ருத்ரன் (7-Oct-16, 8:20 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 91

மேலே