இறைவா
அகந்தையைக்
கந்தையாய்க் கசக்கி
காயப் போட்டு விட்டேன்.
தோல்விகள் குறித்த
கோபத்தைக் கொல்கிறேன்
இதில் அவமானம் என்ன?
ஒவ்வொரு நாளும்
படித்துக் கொண்டிருக்கிறேன்
மனிதர்களை.
தவியாய்த் தத்தளிக்கிறேன்
இந்த வாழ்வுக்குள்
படித்து முடித்துவிடுவேனா?
இறைவா!
என்னை பூரணமாக்கு.