விதியிடம் எதிர்காலம்

பௌர்ணமி நிலவிலே மின்மினியைப்
பற்றி யார் கவலைப்படுவார்?
நிரபராதியாய் சிறையிலிருக்கு உன்னை பற்றி யார் சிந்திக்கப் போகிறார்?

உன்னை நம்பி வந்தவள் பாதி வாழ்க்கை வழியிலேயே சென்று விட்டாள் பூலோகத்தை விட்டு
நீ வளர்த்து ஆழாக்கிய பிள்ளையோ தன் மனைவியின் முந்தானையில்...

பிழையை செய்தவர் யாரோ சிக்கியது நீதான் சிறைச்சாலையில் இன்று நீயோ யாருமற்ற தனி மரமானாய்...

கல்லெறிகளும் காயங்களுக்கும்
உன்னை கலங்கச் செய்யக்கூடாது
சொல்லெறிகளும் சோகங்களும்
உன்னை மழுங்கச் செய்யக்கூடாது

விதியோடு போராடு விதியை மதியால் வெல்லாம் முயற்சி படிகளில் நீயேறி வாய்ப்புக்களை வசப்படுத்து காலமும் நேரமும்
யாருக்காகவும் காத்திருப்பதில்லை

விதியிடமில்லை உன் எதிர்காலம் உனது கைகளில் தான் சிந்தித்து செயற்படு நிச்சயம் உன் எதிர்காலம் மாறும்....

சி.பிருந்தா
மட்டக்களப்பு

எழுதியவர் : சி.பிருந்தா (12-Oct-16, 8:18 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 103

மேலே