இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்

இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!

விடியலில் எண்ணெய் முழுக்குடன்
விகற்ப எண்ணங்களுக்கு முழுக்குப் போட்டிடுவோம்.....

கெடிதலில் நகைத்து அது இடியென முழங்க
குடியெங்கும் தீபங்கள் ஏற்றிடுவோம்.......

திருமாலுக்குச் சாத்திடும் பட்டாடையை
தெருவோர வரியவர்க்கு உடுத்திடுவோம்...

திருக்கோவில் உண்டியல் காணிக்கையாய்
திக்கற்ற வயிற்றை நிரப்பிடுவோம்....

பறவைகள் அழைத்து பல்லுயிர் ஓம்புதலாய்
பலகாரங்கள் விருந்தளித்திடுவோம்......

சிற்றுயிர் ஊர்வன பொசுங்காமல் காத்திட
சுற்றறிந்து வேட்டுகள் வைத்திடுவோம்......

அண்டை வாசிகளும் அண்டி சூழந்திட
பண்டங்கள் பகிர்ந்து மகிழந்திடுவோம்.....

சண்டையில் பிரிந்த சிண்டிபிடி உறவுகளை
தண்டலர் வாழ்த்தால் பனித்துடுவோம்.....

உள்ளிருக்கும் நரகாசுரனை வதம் செய்து
நல்லிணக்க தீபாவளியை கொண்டாடிடுவோம்...!

இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் !

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (4-Nov-16, 1:24 pm)
பார்வை : 66

மேலே