ஏமாளியாக்காதோ
வார்த்தைகள்
வெளிவர முடியாமல்
சிறைபடும்
சூழ்நிலை
மௌனமாகும்—அது
ஒரு பண்பு
மனித உடலும்
மனமும்
சஞ்சலமின்றி
அசைவற்ற நிலை
அமைதி—அது
ஒரு பண்பாடு
பண்பென்பது
தனி மனிதனின்
சொத்து,
பண்பாடென்பது
சமுதாயத்தின்
கோட்பாடு
இன்று மௌனம்
ஒரு பண்பாடாக
மாறி வருகிறது
எவரும், எதுவும்
எப்படிப் போனாலென்ன
எனும் சுயநலம்
நீதிக்கும்
அநீதிக்கும்
வேற்றுமை பாராமல்
எப்போதும்
மௌனம் சாதித்தால்
ஏமாளியாக்காதோ!