வாழ வழிகாட்டும் செல்லாத ₹500

எதுக்குதடா உன்னக் கைது பண்ணச் சொல்லற?
@@@@@@
அய்யா நா வேலையில்லாப் பட்டதாரிங்க. எட்டாம் வகுப்பு வரை இலவசமா தேர்ச்சி பெற்றவனுங்க. அப்பறம் மதிப்பெண் தாராளமயக்களாலும் காப்பியடிச்சும் முது அறிவியல் (எம்.எஸ்ஸி) பட்டமும் வாங்கிட்டங்க. நா எந்த வேலைக்கும் தகுதி இல்லாதவங்கறத இப்பத் ஒணரறனுங்க. சென்னைக்குப் போய் மூட்டை தூக்கியாவது பொழச்சுக்கலாம்னு பேருந்தல வந்தங்க. உங்க ஊருல சாப்பாட்டுக்கு பேருந்த நிறுத்தினாங்க. நா எறங்கி ஒரு உணவகத்தில சாப்பிட்டு முடிச்சுட்டு கல்லாவுல பணம் குடுக்க போனனுங்க. எங்கிட்ட இருந்த 500 ரூபா நோட்டை குடுத்தேனுங்க. " என்னய்யா செல்லாத பணத்தைக் குடுக்கற. 1000, 500 எல்லாம செல்லாதுன்னு அறிவிச்சு 3 மணி நேரம் ஆகுது. நீ 100 ரூபாய்க்கு சாப்பிட்டு இருக்கற. 100 இருந்தா குடுத்துட்டுப் போ இல்லன்னா எங்க உணவகத்தில பத்து நாளைக்கு காலைல 5 மணில இருந்து இரவு 11 மணி வரைக்கும் எடுபிடி வேலையெல்லாம் செய்யணும். பதினோறவது நாளுத்தான் நீ எங்க எடத்திலிருந்து விடுதலை ஆகமுடியும்.
@@@@@@
சரிங்க அய்யா'.
@@@@@
"உங்கிட்ட இருக்கற செல்லாத 500ஐ எங்ககிட்ட குடுத்திடு. நாங்க ஏரிச்சுப் போடறோம். செல்லாத நோட்டு உனக்கு எதுக்கு?"ன்னு சொல்லி வாங்கிட்டாங்க அய்யா. பத்து நாளு நேத்துத்தான் {முடிஞ்சுதங்கய்யா. நா இப்ப எங்க போறதன்னு தெரீலீங்கய்யா. அதான் என்னக் கைது பண்ணி ஒரு அஞ்சு வருசம் சிறையில அடச்சீங்கனா நல்லதுங்கய்யா. தெனமும் சத்தான களி உருண்டை வறுத்த வேர்க்கடலை சுண்டல் கடலை எல்லாம் கெடைக்குமுங்க. நா அந்த அஞ்சு வருசத்தில தையல் தொழிலைக் கத்துக்குவேன். விடுதலையாகி வெளில வந்தவுடன் சென்னைப் புறநகர்ப் பகுதிலே தையல் கடை வச்சு தெனம் 3000 ரூபா சம்பாதிப்பேனுங்க".
@@@@@
நீ சொல்லறதெல்லாம் சரி தான். உன் மேல எந்த வழக்கப் பதிவு செய்யறது.
சரி. ஒரு கற்பழிப்பு வழக்கு சம்பந்தமான குற்றவாளி யாருன்னு தெரில. அந்தக் குற்றவாளி நீ தான்னு நீதிபதிகிட்டச் சொல்லு. உனக்கு என்னென்ன செய்யுணுமோ அதையெல்லாம் பண்ணி உனக்கு 7 வருசம் சிறையில இருக்கறக்கு தண்டனை வாங்கித் தர்றேன்.

@@@@@

ரொம்ப நன்றிங்க அய்யா.
@@@@@!
டேய் தம்பி எழுந்திருடா கால்ல எல்லாம் விழக்கூடாது. எழுந்திரு. யோவ் 1808 இவனை லாக்கப்ல அடைச்சு வையு.
@@@@@@
சரிங்க அய்யா.

எழுதியவர் : மலர் (13-Nov-16, 1:14 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 266

மேலே