ஏவாள்

நானோ பாதாம்நிற ஆதாம்
நீயோ எனை ஏவல்
செய்யும் ஏவாள்
காதலைச் சொல்லடி
உன் நாவால்
இல்லையெனில்
ஈக்களும் பூக்களும் நிறையப்போகின்றது
என் உடல்
கல்லறையை நிறைக்கப்போகின்றது
என் சாவால்
நான் உயிர் பெற்று
வாழ்வெனும் போர்க்களத்தில்
வெற்றிபெற தா வாள்