கருப்பு பணம்

கட்டு கட்டா வச்சிருக்கும்
கருப்பு பணக்காரனெல்லாம்
கால்மேல கால்போட்டு -ஏசியில
சில்லுன்னு கூலாதான் இருக்கான்

குருவிப்போல சேத்துவச்சி
பாத்து பாத்து செலவு செய்யும்
பகட்டுக்காரன் மொத்தபேரும்- சில்லரைக்கு
நாக்குதள்ளி எச்சித்தண்ணி குடிக்கான்

முதலைகள பிடிக்க எண்ணி
விரிச்சி வச்ச வலையிலிப்ப
மூஞ்சுறுங்க மாட்டிக்கிச்சி- முழிப்பிதுங்கி
தப்பிச்சா போதுமுனு இருக்கு

கவலையெல்லாம்,இப்ப தினம்
கத்தரிச்சி குப்பையில
கண்டபடி எறியும் பணம்-உதவலையே
நேத்தொரு ஏழைக்குமே வருத்தமாதான் இருக்கு.....

எழுதியவர் : தென்றல் ராம்குமார் (16-Nov-16, 2:43 pm)
பார்வை : 194

மேலே