புத்தகம் கையிலே

நண்பன் ஒருவன்
குடிக்க மோரும்
படிக்க புத்தகமும்
கொடுத்தான்...

பசியோடு குடித்த
மோர் காலியாகியது...

முழுமையாய்ப் படித்த
புத்தகம் இன்னும்
அப்படியே இருக்கிறது
திருப்பிக் கொடுக்க
ஏதுவாக...

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (16-Nov-16, 6:13 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : puththagam kaiyile
பார்வை : 944

மேலே