பிரியாதிருக்க வேண்டுமடி நீயும் நானும் 555
என்னுயிரே...
மழை பொழியும் நேரம்
நனைந்து செல்ல...
உனக்கும் எனக்கும்
எப்போதும் ஆசைதான்...
எப்படியும் உன்னை
சுமக்க சொல்வாய்...
வழுக்கிவிழ வரம்பு மீறும் முத்தம்
ஒன்று இதழ்களில் வெடிக்குமடி...
கள்ள சிரிப்பில் செல்லமாக என்னை
திட்டுவாய் லூசு என்று...
இத்தனை பெண்களில் நீ மட்டும்
எப்படி என்னை நேசித்தாய்...
உன் கோபம் எல்லை
மீறும்போதெல்லாம்...
உன்னை அதிகமாக
ரசிப்பேனடி...
மனதுக்குள் குதூகலமாகவும்
உன் முன்னாள் சோகமாகவும்...
என் விழிகளில் கலந்த
உன் பிம்பங்கள்...
என் காதலின் வானவில்
வண்ணங்கள்...
என் விழியில் நீயும் உன் விழியில்
நானும் இருப்பது போல...
மணவறைவாசம் நாம்
கண்டாலும்...
பெருவிரல் கட்டி பிணவறை
செல்லும்வரை...
பிரியாதிருக்க வேண்டுமடி
நீயும் நானும்...
இன்றுபோலவே.....