காட்சிப் பிழை
எனது அருகில் உள்ளவன் வினவினான்!
"இனிமையான குரலுடைய குயிலுக்கு
யார் இந்த நிறத்தைக் கொடுத்து?" என்று.
எனக்குள்ளும் இதே போல் ஓர் வினா.
"இந்த குரலுக்கு இதுபோல்
நிறம்தான் இருக்கவேண்டுமென்ற
எண்ணத்தை யார் இவனுக்குள் விதைத்தது?"
நமது எண்ணங்கள் என்றுமே
காட்சிப் பிழைகளுடன்!